ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள் இந்த புத்தகம் ‘துக்ளக்’ ரமேஷ் அவர்களின் 40 ஆண்டுக்கால பத்திரிகையுலகப் பயண அனுபவங்களை அவரே நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது. எத்தனையோ பிரமுகர்களுடன் கிட்டிய அறிமுகம் உரையாடவும் நட்பு கொள்ளவும் கிடைத்த வாய்ப்பு அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகத் திகழ்ந்து பெற்ற நற்சான்றிதழ் – இவற்றை எல்லாம் முடிந்தவரை நினைவு கூர்ந்து பதிவு செய்திருப்பதுதான் இந்த நூல்.