தெருவில் பேருந்து நிறுத்தத்தில் வீட்டு முற்றத்தில் மரத்தடியில் சமையலறையில் கடை வாசலில் என எங்கெங்கும் கவிதை சிறு தானியம் போல் சிந்திக் கிடப்பதைக் கவிதைத் தாம்பாளத்தில் திரட்டிக் கொடுக்கிறார் ஜே. மஞ்சுளாதேவி. மனிதநேயம் கசியும் வாழ்வின் தருணங்கள்தான் மஞ்சுளாவின் கவிதைக்கு மூலப்பொருள். வேறு எந்தக் கவிஞரும் தொடாத இந்தக் களம் அவருடைய கவிதைகளின் களியாட்டரங்கம். - கவிஞர் சிற்பி