Anbulla Maadhuvirkuகேட்பவர் பேச்சைக் கேட்டு வம்பில் மாட்டிக்கொள்ளும் மாது. மனைவியிடம் அன்பைப் பொழியும் அவனை மனைவியின் அன்பை பரிசோதிக்க நண்பன் கூறும் வழி... மாதுவிற்கு மாஜி காதலி எழுதுவதுபோல் தாமே கடிதம் எழுதிப்போட்டு அதை மாதுவின் மனைவி எப்படி எடுத்துக் கொள்வாள் என்று சோதனை செய்ய முயல...அந்தக் கடிதம் 36 பீரங்கி லேனிலிருந்து (36 செளரங்கி லேன் தாக்கல்) வருவதாகப் போட உண்மையில் அதே விலாசத்தில் அதே பெயரில் ஒருவள் இருக்க... போதாதா... கிரேஸி மோகனின் பேனா சிரிப்பு வெடிகளைக் கொளுத்திக் கொளுத்திப் போட...இந்தக் கதை தொலைக்காட்சித் தொடராகவும் ‘சிரிகமபதனி’ என்ற தலைப்பில் என்னால் டைரக்ட் செய்யப்பட்டு பெரிதும் பேசப்பட்டது.- S.B. காந்தன்