கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ் மணத்தைப் பெரியவர் களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் மாணவர்களுக்குங்கூடப் பல ஆண்டுகளாகப் பரப்பி வருகிறர்கள். தித்திக்கும் இந்தக் கதைகளை வெளியிடுவதில் மிக மிகப் பெருமையடைகிறோம். குழந்தைகள் இவற்றை விருப்புடன் சுவைப்பார்கள் என்பதை நன்கு அறிவோம்.மேலும் ஆசிரியர் அவர்களுடைய இன்னோரு தொகுப்பு விரைவில் வெளிவரும் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.