கவனமின்றி அல்லது போதுமான அளவுக்கு அக்கறையின்றி நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன வேலைகளால் நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் தெரியுமா?\n\nநம் வாழ்வோடு கலந்துவிட்ட பிளாஸ்டிக் நம் சூழலை எப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிவோமா? ஆளில்லா விவசாயத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தொழிலாளர்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை நாம் அறிவோமா? செல்வம் ஒரு பக்கம் சேர்ந்துகொண்டே போகும்போது வறுமை ஏன் முடிவில்லாமல் அதிகரித்துக்கொண்டே போகிறது?\n\nஇயந்திரமயமாக்கலும் செயற்கை நுண்ணறிவும் நம் பிரச்னைகளைத் தீர்த்துவிடுமா? கம்ப்யூட்டர் நம் தலைவிதியை நல்லபடியாகத் திருத்தி எழுதிவிடுமா? தேசம் செழிப்படைய ஜிடிபியில் கவனம் செலுத்தினால் போதுமா?\n\nநம் சிக்கல்கள் தீரவேண்டுமானால் முதலில் நம் சிக்கல்கள் என்னென்ன என்பதை நாம் சரியாக உணரவேண்டும். அப்போதுதான் நமக்கான தீர்வுகள் கிடைக்கும். சோம. வள்ளியப்பனின் இந்நூல் நம் எண்ணங்களையும் வாழ்வையும் சரியான திசையில் செலுத்துவதோடு வளமான ஒரு எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தையும் வகுத்து நம் கரங்களில் அளிக்கிறது.\n\nசிந்தனை மாற்றத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் விதைகளைத் தூவும் முக்கியமான நூல்.+தேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்...இந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை.ஆதரவு எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவில்லை. பண மதிப்பு நீக்கம் காலத்தின் கட்டாயம்; தவிர்க்கமுடியாதது என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால் சில ஆதாரமான கேள்விகளுக்கு அவர்களால் விடையளிக்க முடியவில்லை. அரசு எதிர்பார்த்ததைப் போல் கறுப்புப் பணம் ஒழிந்திருக்கிறதா? பயங்கரவாதச் செயல்கள் குறைந்திருக்கின்றனவா? வரி ஏய்ப்பு இப்போது நடைபெறுவதில்லையா? ரொக்கத்தைக் கைவிட்டுவிட்டு டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு அனைவரும் மாறுவதுதான் தீர்வா?இன்னொரு தரப்பினரோ பண மதிப்பு நீக்கம் முழுத் தோல்வி அடைந்துவிட்டது என்கிறார்கள். எனில் ஏன் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள் என்பதற்கு இவர்களிடம் விளக்கமில்லை.சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் அரசியல் சார்பு எடுக்காமல் பண மதிப்பு நீக்கத்தின் நிறை குறைகளையும் சாதக பாதகங்களையும் நடுநிலையோடு அலசி ஆராய்கிறது. அனைவரையும் பாதித்த ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை குறித்து அனைவருக்கும் புரியும் மொழியில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான நூல்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.