சுதா மூர்த்தியின் 200ஆவது புத்தகம் என் நன்பர்களின் கதையாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின் தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரிஎன்னுடைய கதைகளில் நானே வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த அழகான மலர்களைப் போல இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் நான் மிகவும் போற்றும் அனுபவங்கள். இவை எல்லாவற்றையும் தொடுத்து ஒரு மாலையாக இங்கு கொடுத்திருக்கிறேன். பெரும்பாலான அனுபவங்கள் என்னுடைய பழைய புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் புதிதாக இதில் இரண்டு மலர்கள் உள்ளன ஒன்று என் எழுத்துப் பயணத்தைப் பற்றியது இன்னொன்று உண்மையான பரோபகாரத்தை விளக்குவது. - சுதா மூர்த்தி