சூப்பர் ஸ்டார்'' ரஜினிகாந்தின் கவர்ந்திழுக்கும் காந்தத் தன்மைக்கு எந்த விவரிப்பும் தேவையில்லை. ஆனால் பணி நேரங்களில் அவர் எப்படி இருப்பார் படப்பிடிப்பின் போது அவர் நடந்துகொள்ளும் விதம் அவரது இயக்குனர்களிடம் அவர் காட்டும் அக்கறை சார்ந்த அபிமானம் நிஜ வாழ்வில் அவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வு போன்றவை யெல்லாம் அவரது ரசிகர்கள் எத்தனை பேருக்கு உள்ளார்ந்து தெரிந்திருக்கும்?சூப்பர் ஸ்டாரின் மேற்கூறிய விஷயங்களையும் அவரின் அருகில் இருந்து தாம் கூர்ந்து அவதானித்த இன்னபிற தன்மைகளையும் ‘பாட்ஷா உடன் நான்’ புத்தகத்தில் வெளிச்சம் பாய்ச்சிக் காட்டியிருக்கிறார். அண்ணாமலை வீரா பாட்ஷா ஆகிய ரஜினியின் மூன்று மெகா ஹிட் படங்களின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. சினிமாவின் சரித்திரமான ரஜினியின் இம் மூன்று படங்கள் உருவான விதம் படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் பாடல் - வசனம் - இசையில் நிகழ்ந்த அதிரடிகள் என்று ரசிகர்களின் கைப்பிடித்து பயணம் அழைத்துச் சென்று அந்நாட்களிலேயே நிறுத்தி விடுகிறார் சுரேஷ் கிருஷ்ணா. ஷூட்டிங்கிலும் வெளியிலும் ரஜினியின் ஆளுமை ஏற்படுத்திய பரவசங்களை விவரிக்கும் பக்கங்கள் இதற்கு முன் எப்போதும் படித்திராதவை. மொத்தத்தில் ரஜினி ஓர் சகாப்தம் என்பதற்கான அழுத்தம் திருத்தமான பதிவே இந்த ‘பாட்ஷா உடன் நான்’.