பாரதிய ஜனதா கட்சி: உலகின் மிகபெரிய கட்சியின் கடந்த நிகழ் எதிர்கால கதை வெறும் இரண்டு எம்.பி.க்களுடன் நாடாளுமன்றத்திலே இருந்த பி.ஜே.பி. வாஜ்பாய் அத்வானி சகாப்தத்தில் படிப்படியாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியதையும் அடுத்ததாக மோடியின் சகாப்தத்தில் முதல் முறையும் இரண்டாம் முறை ஆட்சி அமைத்ததையும் கிட்டத்தட்ட மஹாபாரதப் போரை விவரிப்பதுபோல வியூகங்களுடன் த்ரில்லர் கதைபோல எழுதியிருக்கிறார். இந்தியாவை ஆளும் பி.ஜே.பி. இன்று உலகின் மிகப்பெரிய கட்சி என்று ஆரம்பிக்கும் நூல் கடைசிவரை அதே வேகத்தோடு அதன் அரசியல் சரித்திரத்தைச் சொல்கிறது. இந்த நூல் உலகின் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு. கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. அரசியல் ஆய்வாளர்கள் சரித்திர மாணவர்கள் வாசிப்பு ஆர்வலர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.