கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார உத்திகள் விளம்பரத் தந்திரங்கள் இவற்றுக்கு எதிராக நகல்களின் நகல்களாக நம் கனவுகளை நிலத்தை கருத்தடை செய்யும் நுண்ணதிகாரத்திற்கு எதிராக நவீன படிமங்களைத் துணைக்கழைத்துக் கொண்டு எழுதிப் பார்த்திருப்பவை இந்தக் கவிதைகள். உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில் உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளைப் பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக 'பின்னங்களின் பேரசைவு' தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த போர்ச் சூழலில் மனித நேயமும் தனி மனித சுதந்திரமும் அவன் இருப்புக்கான அர்த்தமும் தார்மீகக் கோபமும் இந்தக் கவிதைகளின் குறுக்குவெட்டு தோற்றத்தில் உதிரமும் சதையுமாக எஞ்சக் கூடும். அதன் ஆன்மா சக உயிருக்கான அன்பாய் இருக்கிறது.