நன்கு படித்து அமெரிக்காவில் சயன்டிஸ்ட் – ஆக இருக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்கா போனாள் ரோஷிணி. அங்கே போனால் Researching படிக்கலாம் என்ற ஆசையில் இருந்தாள் ரோஷிணி. ஆனால் ஆகாஷுக்கோ இவள் இன்னும் அதிகமாகப் படித்தால் நம்மை மதிக்க மாட்டாள் என்ற எண்ணம் வந்தது. அதனால் அவள் மேற்கொண்டு படிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கட்டளை இட்டான் ஆனால் ரோஷிணிக்கோ தன்னுடைய தன்மானமே போனது போல் ஆனது.. அதனால் தன்னை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புமாறு கேட்டாள். ஆனால் ஆகாஷுக்கோ அவளை திருப்பி அனுப்புவதில் உடன்பாடு இல்லை. அதனால் வேலைக்குப் போகும்போது அவளை வீட்டில் வைத்துப் பூட்டி விட்டுப் போகலானான். அந்த வீட்டுச் சிறையிலிருந்து ரோஷிணி வெளியே வந்தாளா அவள் படிக்க வேண்டும் என்று நினைத்த அவளது ஆசை நிறைவேறியதா?