நமது நாடு தொழில்வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு சட்டத்தை முழுமையாக நøமுறைப்படுத்தி உலக வெப்பமயமாதலை தவிர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இச்சூழலில் எத்தனால் பயன்பாட்டை இந்திய அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது. இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோலுடன் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் 20 சதவிகிதம் எத்தனால் கலந்து பெட்ரோõல் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் கொள்கை முடிவெடுத்துள்ளன. பெட்ரோல் அன்னிய செலவாணியை குறைக்கவும் அதேசமயத்தில் வாகனங்களின் புகையால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலான எத்தனால் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியது.