*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
பல்லாயிரம் ஆண்டுகளில் உலகின் நிலையும் மாறியது. புதற்கள் காடுகளாகின மலைகள் வசிப்பிடமாகின ஆற்றுப்படுகைகள் மனித நாகரிக தொட்டிலாகின. எல்லாம் தன்னிலையில் வளர உயிர்கள் உலகில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பின. இச்சூழலில் மனிதனின் பரிணாமம் சற்று விரைவாய் சிந்திக்கும் திறன் பெற பின் தான் சந்திக்கும் இடமனைத்தும் தனதாக்கினான். காடுகள் வீடுகளானது எல்லைகள் தோன்றின அதிகாரப் பசியில் இயற்கையை இரையாக்கினான். விஞ்ஞான வளர்ச்சியில் வாழ் உலகை பாழாக்கினான். தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென மென்மேலும் சீர் கெடுத்தான். இந்நிலையில் இப்புத்தகமானது ஒரு விந்தை முயற்சி. ஒரு கறிக்கடைக்காரன் கை கொண்டு ஆட்டிற்கு கருணை மனு எழுதும் முயற்சி. மரணிக்கச் செய்த மனித மனங்களில் மறுமலர்ச்சி தேடும் முயற்சி. 45 எழுத்தாளர்கள் இணைந்து இவ்வுலகம் எவருக்கும் பொதுவென நிறுவும் படைப்பு.