Scintillating Crime Novels by Legend Author and Crime Novelist Rajeshkumar. பரபர விறுவிறுவெனபயணிக்கும் 2 க்ரைம் கதைகள். இந்த புத்தகத்தில் ராஜேஷ்குமார் அவர்கள் 1980ல் எழுதிய முதல் தொடர்கதையான '' ஏழாவது டெஸ்ட் ட்யூப்'' மற்றும் 1998ல் குமுதத்தில் வெளிவந்த ஆயிரமாவது தொடர்கதையும் இடம் பெற்றிருக்கின்றன. ஏழாவது டெஸ்ட் ட்யூப் - பல நூற்றாண்டுகளுக்குமுன் மண்ணில் புதைந்த சிறப்பு சக்தி வாய்ந்த ஏழு டெஸ்ட் ட்யூப்புகள்.அதைத் தேடிச் செல்கிறது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு. அதற்காக நடக்கும் சூழ்ச்சிகள் கொலைகள் என பரபர விறுவிறுவென நகரும் கதைக்களம். டைனமைட் 98 - இந்தியாவின் தலைநகர் டெல்லியை டைனமைட்டுகள் கொண்ட தகர்க்க சதி செய்யும் தீவிரவாதிகள்.அவர்களின் முயற்சிகளை வேரறுக்கத் துடிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளும் நம்மை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும். காதல் துரோகம் வஞ்சம் தீர்க்கும் வெறி என பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு இந்த நாவல்.