'எப்படி எழுதுவது' என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கும் 'நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்' என்று அறிந்துகொள்வதற்காகக் கேட்பவர்களுக்கும் இந்நூல் உதவக் கூடும். - பாரா கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். இசை ஓவியம் போன்றவை எப்படியோ எழுத்தும் அப்படித்தான். அடிப்படைகளை இலக்கணங்களை வழி முறைகளை ஒரு சரியான ஆசிரியர் மூலமாக அறிந்துகொள்வது எளிது. இந்நூல் பா. ராகவனின் முப்பதாண்டுக் கால எழுத்துலக அனுபவச் சேகரிப்பின் சாரம்.