<p>இந்தப் புத்தகம் - நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு </p><p></p><p>கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க </p><p>உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் ! </p><p></p><p>இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும். </p><p></p><p>எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஆழமான நட்புக்கு இந்தக் கடித நூல்- இதய ஒலிஒரு அடையாளச் சின்னம்! </p><p></p><p>என் இனிய நண்பரே! </p><p></p><p>உங்களுக்காக - உங்கள் உடல் நலிவு நீங்குவதற் காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார்! </p><p></p><p>பல்வேறு தெய்வங்களின்பால் பக்தி கொண்டோர் நீங்கள் நலம் பெற்று எழ பிரார்த்தனை நடத்துகிறார்கள்! </p><p></p><p>உங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ள கட்சித் தோழர்கள்-முன்னணியினர்-ஆலயங்கள் பல சென்று உங்களை மீண்டும் நலமுடன் காண வேண்டுமென பிரார்த்தனை நடத்துகிறார்கள்! </p><p></p><p>பிள்ளைப்பிராய முதலே அந்த நம்பிக்கையில்லாமல் பெரியார் வழியில் அண்ணா வழியில் வளர்ந்துவிட்டவன் நான்! அதனால் நான் உங்களுக்காக தெய்வங்களிடம் கையேந்தி வரம் கேட்டுப் பயனில்லை என்று கருதுகிறவன்! அது என் கொள்கை! </p><p></p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.