<p>'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்றும் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றும் கூறிய பாரதியார் சிலப்பதிகாரத்தைக் கூறும்போது நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என உள்ளம் குளிர்ந்து பாடுகின்றார். </p><p></p><p>ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காப்பியம் என்றாலும் இன்னும் எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடப் படிப்போர்தம் நெஞ்சையள்ளும் சீர்மையைச் சிலப்பதிகாரம் பெற்றிருக்கிறது. </p><p>முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரித்தாகி சேர சோழ பாண்டிய நாட்டினரைத் தொடர்புபடுத்தித் தமிழ் நாட்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்திக்காட்டும் முத்தமிழ்க் காப்பியமாக இது விளங்குகிறது. </p><p></p><p>தமிழின் தொன்மை தமிழ் மக்களின் பண்பாடு உயரிய வாழ்க்கை செல்வ வளம் அரசியல் சமுதாயம் கலை தொழில் முறைகள் வணிகம் வெளிநாட்டுத் தொடர்புகள் முதலிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தும் சீரியதோர் தமிழ்க் கருவூலமாகச் சிலப்பதிகாரம் இருந்து வருகிறது. </p><p></p><p>அரும்பத உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி போன்ற அறிஞர் பெருமக்களும் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழன்பர்கள் பலரும் இக் கருவூலத்தில் நுழைந்து முத்து மணிகளைக் கொணர்ந்து அனைவருக்கும் வழங்கியுள்ளனர். </p><p></p><p>'இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர் </p><p>விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' </p><p></p><p>என்பதற் கிணங்க நாளும் தமிழாய்ந்து -தமிழ் வளர்த்து - தமிழ் காத்துவரும் முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தம் ஆய்வுப் பார்வையை இம் முத்தமிழ்க் காப்பியத்தின் கண் செலுத்தியுள்ளதன் விளைவே</p><p></p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.