தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாக விளங்கும் தி.மு.க. விற்கு 45ஆவது வயதில் தலைவராக வருவது சாதாரண காரியமல்ல. குடிப்பெருமை குலப்பெருமை இல்லாத கலைஞர் தி.மு.க. விற்குத் தலைவராக வந்தது அவரது உழைப்பினாலேயேயன்றி வேறு எந்தக் கருணையினாலும் அல்ல. கட்சித் தொண்டராக இருந்து கட்சித் தலைவராக வந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் தான். தென்னகத்தில் காமராஜர் ஒருவரைத்தான் குறிப்பிட