இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ. பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது. அசாதாரணமான கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா. அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும். மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது. ''சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்துக்குத் திரும்பும் வழி இது.''. - தேவதேவன்