கடந்த இருபதாண்டுகளாக புனைவெழுத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாற்பதாண்டுகால வாசிப்பனுபவத்தின் வெளிப்பாடுகளே இக்கட்டுரைகள். புதுமைப்பித்தனிலிருந்து சத்யஜித்ரேவுக்கும் ஜெயகாந்தனிலிருந்து உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்கும் பாரதியிலிருந்து யசுனாரி கவாபட்டா பெர்லேகர் க்விஸ்டுக்கும் வாசகனால் வெகு சுலபமாகப் பொரவேசிக்க ஏதுவான விதத்தில் இவை எழுதப்பட்டுள்ளன.நவீன எழுத்தைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கும் தன்மை கொண்டது இந்நூல். வாழ்க்கையும் கலையும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எழுதி வாழ்ந்து சென்றுள்ள மகோன்னத ஆளுமைகளின் ஆன்மாக்களுடன் உரையாடக் கிடைத்த அரிய சந்தர்ப்பம் இது.