Kadal Mel Kumizhigal

About The Book

<p>திங்கள் தோறும் வெளிவரும் நம் குயிலின் 12 குரல்கள் நிறைவுற்றன. முதலாவது ஆண்டு நிறைவு பெற்றது. அதன் நினைவாக இக்குரல் ஆண்டு மலர் என வெளியிடுகிறோம்.</p><p></p><p>அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்.</p><p>செம்மறித் திறல் எழுந்து</p><p>கைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே.</p><p>எண்சீர் விருத்தம்</p><p>நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்</p><p>நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்</p><p>காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே</p><p>நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி</p><p>ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே</p><p>உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்.</p><p>கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி</p><p>கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே.</p><p>ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம்!</p><p>உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்!</p><p>திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும் கையில்</p><p>செங்கோலேந் தும்பிறரும் மக்களைச் சார்ந்தோரே!</p><p>பெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்</p><p>பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப்பார்கள்.</p><p>வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்</p><p>வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்என்றான்.</p><p>செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்;</p><p>திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.</p><p>செம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத்</p><p>திறலுக்கும் நடைபெற்ற திருமணம் பாராட்டி</p><p>நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த</p><p>நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.</p><p>செம்மையுறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்</p><p>திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசேஎன்றார்.</p><p></p>
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE