தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.. சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு தான் “பழைய சாலை” ஆகிவிட்டதை! சாலைகளின் உளவியலைப் பதிவு செய்த உலகின் முதல் கவிஞனாக கவிமுகில்தான் இருக்கக்கூடும். “மொத ஆட்டம்” என்றொரு கவிதை டூரிங் கொட்டகைகளுக்கு மாலை 7 மணி காட்சிக்குச் செல்வதை அருமையான கவிதையாகப் புனைந்திருக்கிறார் கவிஞர் கவிமுகில்.. “கல்பொரு சிறுநுரை” உங்களின் நெஞ்ச மேடுகளில் தொடர்ந்து முட்டி மோதும்! அவை உருவாக்குகிற நுரைகள் படர்ந்து பெருகி உங்களை வான் மேகங்களுக்கிடையே கடத்திச் செல்லும் ஆற்றலுடையவை!
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.