ஒவ்வொரு தந்தைக்குள்ளும் தனெக்கென்று உலகத்தில் ஒரு இடம் பிடிக்க சாதிக்க ஆசைகளும் வழிமுறைகளும் இருந்தும் அவை அனைத்தும் குடும்பத்திற்குப்பின்னே தள்ளப்படும். பல நேரங்களில் காலம் கடந்த பின்னரே கண்டறியப்படும். இலக்கிய துறையில் குறிப்பாக பேசுவதிலும் எழுத்திலும் தீராத ஆசை கொண்டிருந்தவர் எனது அப்பா. அவர் பல கவிதை குழுமங்களில் உறுப்பினர் என அறிவேன் இருப்பினும் இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட கவிதைகளை தனது சிறிய திறன்பேசியை கொண்டு எழுதி இருப்பாரென நினைக்கவேயில்லை. ஒரு நாள் தொகுக்க வேண்டும் என பேச்சு வாக்ககில் அவர் கூறியது மட்டுமே நினைவில். அப்பாவின் முதலாவது நினைவாண்டிற்குள் தொகுத்து வழங்க வேண்டும் என்ற முயற்சியில் தொகுதிகளாய்...