Maadhu Mirandalதப்பாக நினைப்பது Misunderstanding. மனைவியைத் தப்பாக நினைப்பதை Mrs.Understanding என்று தலைப்பிட்டார். சாது மிரள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நாடகத்தில் சாதுவான மாது மிரள்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் நாயகன் பெயர் மாது. பெயர் மட்டும் மாறுவதில்லையே தவிர குணம் வெவ்வேறு. இந்த நாடகத்தில் மாது ஒரு சந்தேகப் பேர்வழி. இந்த நாடகத்தில் மாதுவின் அம்மாவாகப் பாலக்காட்டு தமிழ் பேசி அறிமுகமான நளினி அனைவரையும் அசத்தி அவார்டும் பெற்றார். நாடகக் காட்சிகளும் அவைகளுக்கு ஏற்ற திரைப் பாடல்களும் நடிக நடிகையரே பாடி ஆடுவது போன்று ராஜ் டிவியில் நாங்கள் வழங்கிய ‘சிரிகமதநி’ என்ற வெற்றித் தொடரிலும் இந்த நாடகம் சூப்பர் ஹிட் ஆனது.- S.B. காந்தன்