<p>'படார் என்ற சப்தம் அறிவித்தது வந்து நின்ற காரிலிருந்து ஆள் இறங்கியாயிற்று என்பதை.</p><p>காரின் கதவைப் பலமாக அறைந்து மூடிவிட்டு குதிங்கால் உயர்ந்த பூட்ஸ்கள் 'டக்...டிக்.. டக்' என்று லாடங் கட்டிய குதிரையின் காலடி ஓசைபோல் - கட்டியம் கூற 'அம்மாளு' நடந்து வருகிறாள் என்பதை அறையில் இருந்துபடியே ஆராவமுதர் உணர முடிந்தது. </p><p></p><p>இயல்பாக அவரது கண்கள் கடிகாரத்துக்குத் தாவின. நெடுமூச்சு ஒன்று உயிர்த்தார் ஸ்ரீமான்! </p><p></p><p>மணி ஒன்பது ஐம்பத்து ஒன்று. பத்துமணியாக இன்னும் ஒன்பதே நிமிஷங்கள்! அம்மாளுக்கு இப்ப தான் வீட்டு நினைவு வந்தது போலிருக்கு !..ஊம் </p><p>நெஞ்சொடு புலம்பி நின்ற ஸ்ரீமான் ஆராவமுதரின் குமுறலுக்குக் குளுமைதர வரும் தென்றல் போல் வந்து சேர்ந்தாள் லேடி கனகம் 'ஹல்..லோ !' என்றபடி. </p><p>நாகரிகச் சரக்குகளின் நடமாடும் விளம்பரம் மாதிரி வந்து நின்றவளைப் பார்த்தும் பாராதது போல நடிக்க முயன்றார் அவர். அவளுக்குத் தெரியாதா என்ன அவரது பம்மாத்துக்கள்! </p><p></p><p>'ஓஹ்ஹோன்னாளாம்! இன்னைக்கி எடிட்டர் சாருக்கு ரொம்ப ரொம்ப சிந்தனை வேலை போலிருக்கு!..பாவம்! இந்த பொது ஜனங்களுக்கு ஒரு எழவுமே புரியவில்லை. அவர்களை அறிவுபெறச் செய்வான் வேண்டி நமது ஆசிரியர் எவ்வளவு உழையா உழைத்து எவ்வளவு தியாகங்கள் செய்கிறார் என்பதை ......'</p><p></p><p>'ஷட் அப் என்று உறுமினார் ஐயா. அலறி அடித்து ஒடுங்குபவள் போல நின்று குறும்பாக அவரை நோக்கினாள் கனகம் </p><p>சிறிது கேரம் மௌனம் நிலவியது. மீண்டும் ஆரம்பித்தாள் அவள் - 'ஏன் ஸார் என் மீது கோபமோ? வந்தவளை ஏறிட்டுக்கூடப் பார்க்க முடியாதபடி......!'</p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.