Meesai Aanalum Manaiviஎதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் மாது பல பொய்களில் ஒன்றை மறைக்க தன் மனைவி பெயர் குஷ்மா தேவி என்று மற்றுமொரு பொய் சொல்ல தன் நண்பன் பெரும் மீசை வைத்த சீனுவை குஷ்மா தேவியாகப் பெண் வேடம் போட வைக்க வேண்டிய சூழல். இக்கதைக்கு மோகனுக்கு உதித்த டைட்டில் ‘மீசை ஆனாலும் மனைவி...’பெண்வேடமிட்ட சீனு அறிமுகத்தின் பொழுது நான் சொன்னதற்காக ‘தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது’ பாடல் போட்டோம். அந்த இடத்தில் அப்பாடலுக்கு அரங்கத்தில் நல்ல ஆர்ப்பரிப்பு. இன்றும் இந்த நாடகம் 800 காட்சிகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. - S.B. காந்தன்