இந்தப் புத்தகத்தின்மூலம் காலத்தில் பின்னோக்கிச் செல்வோம் இந்தியாவின் வெவ்வேறு மூலைகளைச் சேர்ந்த தொலைநோக்குள்ள ஐந்து தலைவர்களுடைய அசாதாரணமான வாழ்க்கையைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்தூரைச் செழிப்பான நாடாக மாற்றிய அகில்யாபாய் ஹோல்கரின் கருணை நிறைந்த தலைமையில் தொடங்கி விஜயநகரத்தைத் தெற்கில் ஒரு பண்பாட்டு அரசியல் ஆற்றல் மையமாக ஆக்கிய கிருஷ்ணதேவராயருடைய முயற்சிகள்வரையில் இங்குள்ள ஒவ்வொரு கதையும் வரலாற்றை உயிர்ப்பிக்கிறது. லச்சித் போர்புகான் அஸ்ஸாமை எப்படிக் காத்தார் என்று பாருங்கள் இந்தவி சுயராஜ்யத்தை அமைப்பதற்குச் சத்ரபதி சிவாஜி மேற்கொண்ட புரட்சிப் பாதையைப் பின்தொடருங்கள் லலிதாதித்யா முக்தபிடா காஷ்மீருக்கு மிகப் பெரிய புகழைக் கொண்டுவந்தது எப்படி என்று ஆராயுங்கள். சுவையான விவரிப்புகள் உரையாடல்களின்மூலம் சொல்லப்பட்டுள்ள இந்தக் கதைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான ஊடாடும் செயல்பாடுகள் விநாடி வினாக்களும் உள்ளன. இவை இராணுவ வெற்றிகளைத் தாண்டிச் சென்று இந்தச் சிறந்த தலைவர்களுடைய தனிப்பட்ட போராட்டங்கள் அறிவு மற்றும் அர்ப்பணிப்புணர்வைக் காண்பிக்கின்றன. அவர்களுடைய மரபுகள் பல தலைமுறைகளை ஊக்குவிக்கின்றன துணிவு மீள்திறன் தொலைநோக்குள்ள தலைமையில் காலத்தைத் தாண்டி நிற்கும் பாடங்களை வழங்குகின்றன. 10 வயது மற்றும் அதற்குமேலுள்ள குழந்தைகளுக்கும் முகலாயர்களைத் தாண்டி இந்திய வரலாற்றை ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ள பெரியவர்களுக்கும் ஏற்ற இந்தப் புத்தகம் இந்தியாவின் வளமான கடந்தகாலத்திலிருந்தும் அதை வடிவமைத்த அசாதாரணமான நபர்களிடமிருந்தும் ஊக்கமளிக்கும் கதைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.