இத்தொகுப்பில் வெளிப்படும் கூற்றுகள் அரசியல் பொருண்மைகள் மற்றும் குரல்களை வகைப்படுத்தினால்: இயற்கை வழிபாடு ஆதிக்குடிகளின் குரல் அதர்க்கமாக வெளிப்படும் தொல் குடி மாந்ரீகத்தின் குறிசொல்லுதல் ஆதிவேர்பிடித்த சொற்களை தேடுதல் ஆதிநிலத்தை திரும்ப பெறுதலுக்கான போராட்டம் ஆதித்திருமொழி என்ற கற்பிதம் சிறுதெய்வங்களின் பாடல்களை பாடிப்பார்த்தல் பெருமத எதிர்ப்பு மற்றும் இந்துத்துவ எதிர்ப்பரசியல் அன்பெனும் இயல்பும் கருணையுமே தேவை என்று உரைத்தல் சூழலியம் சார்ந்த இயற்கை பாதுகாப்பை பேசுதல் சன்னதப் பாடல்களை எழுதிப்பார்த்தல் கனவுகளை எடுத்துரைத்தல் கனவுகளை காட்சிப்படுத்த முனைதல் நினைவுகள் தரும் சுகத்தை பகிர்தல் இப்படியான பாடுபொருள்கள் இத்தொகுப்பில் உள்ளன.