திருச்சி மாவட்டம் திருவரங்கம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து செல்வி இணையரின் புதல்வர்...! ஆறாம் வகுப்பு மட்டுமே படித்தவர். பெரியாரியக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு இன்று பெரியாரியக் கருத்தாளராகவும் பெரியாரியப் பிரச்சாரகர் ஆகவும் செயலாற்றி வருகிறார். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். 23 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து இயக்கம் சார்ந்த கொள்கைவழிக் கூட்டங்கள் போராட்டங்கள் சிறைவாசங்கள் என இவரது பயணம் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் புதியபுதிய இளைஞர்களை பெரியாரியத்தில் இணைத்து வருகிறார்.