பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் எண்ணற்ற விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அதில் முக்கியப் பங்காற்றுகிறது புத்தகம். நம் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து புத்தக வாசிப்பை சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும். இதனை அன்றாடம் வாசிப்பவர்கள் இயல்பாகவே கற்பனைத்திறன் கொண்டவர்களாகவே இருப்பர். எனவே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புத்தகங்களை பற்றி எழுதிய கவிதைகளையும் கதைகளையும் தேடி பயணிப்போம்.