உடல் உயரம் என்பதில் எனக்கென்ன வெகுமதி? மரபணுக்களின் வழியே கடத்தப்பட்டு பெறுவது அது. வாழ்வின் உயரம் என்பதே எனக்கான வெகுமதி! அதுவே நான் அடைவது. உயரம் என்பது கொடுக்கப்படுவதல்ல அடையப்படுவது. இந்த நூலின் ஏதாவது இரண்டு கருத்துகள் உங்களுக்குள் நுழைந்தால் அதை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் உயரம் கூடும்அதன் வழியே என் உயரமும் கூடும் என்பது என் நம்பிக்கை. ‘ஓ... உலகின் உயரந்த சிகரமே இதற்கு மேல் வளர முடியாது உன்னால். ஆனால்இன்னும் வளர்வேன் நான்!’ என்று எவரெஸ்டின் மீதேறியதும் உற்சாகத்தில் ஆசையில் அந்தச் சிகரத்தைப் பார்த்துக் கூவினானாமே எட்மண்ட் ஹிலாரி. அப்படி ஓர் ஆசையில் சொல்கிறேன் -‘ஓங்கி உயர ஆசை!’