விவேக் துப்பறியும் க்ரைம் கதை... ஊமத்தம் பூக்கள். இந்த நாவல் க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களால் 1998 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. (A Thriller Novel from Crime Novelist Rajeshkumar). எந்த ஒரு உறவில் இருந்தாலும் சரிஒவ்வொரு மனிதனும் ஒரு புதியபுத்தகம். நாம் திருப்பும் அடுத்த பக்கம் எப்படி இருக்கும் என்பது படிக்கும்வரை தெரியாது அதே போல் மனிதனும் எந்த சூழ்நிலையில் எப்படி இருப்பான் என்று தெரியாது. ஒருபக்கம் பிரபலமான மருத்துவமனையில் நடக்கும் தொடர் விபரீதம். இன்னொருபக்கம் மிகப்பெரிய தொழிலதிபரின் வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சினை. இவ்விரு நிகழ்வுகளும் ஒருகட்டத்தில் இணைந்து சிக்கலாகும்போது விவேக் களமிறங்குகிறான். அப்போதிலிருந்து கதை வேறு ஒரு தளத்தில் விறுவிறுப்பான திருப்பங்களோடு இன்னும் அதிவேகத்துடன் பயணிக்கிறது.