Orru Babyin Diary Kurippuஜாதகப்படி அடுத்த வாரிசு உடனே வரவில்லை என்றால் தன் உயிருக்கு ஆபத்து என்பதால் குழந்தை பிறந்தால்தான் தன் சொத்தில் பங்கு என்று வீட்டுப் பெருசு கொளுத்திப் போட்டு விடுகின்றது. குழந்தைகளை உபத்திரவமாக நினைக்கும் மாது அடுத்தவன் குழந்தையை தன்னுடையது என்னும்பொழுது ஆரம்பிக்கிறது ரகளை. இப்படி ஒரு மிகவும் சீரியசான கதையைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நாடகமாக எழுதியதுதான் கிரேஸி மோகனின் அபரிமிதமான அறிவு வளம். பெரியவராக அற்புதமாக நடித்த அப்பா ரமேஷ் பலப் பல விருதுகளை தட்டிச் சென்றார். - S.B. காந்தன்