அரசு பல் மருத்துவமனையொன்றின் வாசலில் மிக கோபாவேசத்துடன் மிஞ்சியிருந்த ஒற்றைப்பல் அசைந்தாட புலம்பிக்கொண்டிருந்த அரை மனநிலையிலான ஒரு கிழவனின் சாயலுடன் கோயில் தாஸ். கடந்த காலங்களில் என்னை கருணைமிக்க அன்பினார் அரவணைத்து நம்பிக்கையூட்டிய எண்ணற்ற முகங்களின் கலவையாய் சாரதா லீனா மேரி. இவர்கள்தான் இந்த நாவல்.