மறுபடியும் என்னை அரங்கில் நிறுத்தியாகிவிட்டது. அங்கு ஏற்கெனவே காக்ஷி நடந்து கொண்டிருக்கிறது. மூலையிலிருந்து என்னை யாரோ முன் தள்ளுகிறார்கள். அரங்கில் யாரோ என்னைக் கைபிடித்து அங்கு இழுக்கிறார்கள். அரங்க விளக்குகள் கண்ணைப் பறித்து மேடை மீது குப்புற விழுகிறேன். நான் காண்பது கனவா? நனவா? கனவுள் கனவா? கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடு என்ன? யாருக்கு யார் கனவு? அவர்களுக்கு நானா? எனக்கு அவர்களா? கனவும் கனவு காண்பதுமன்றி கனவு காட்டுவது யார்? திடீரெனப் பாடம் மறந்த இந்நிலையில் நான் இப்போது விதூஷகனா? வில்லனா?? கதாநாயகனா??? விளக்குகளுக்கப்பால் சூழ்ந்த பேரிருள் படலத்தினின்று கேள்விகள் மின்னலில் பொறித்தவையாய்க் கிளம்பி மண்டையுள் தெறிக்கின்றன.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.