பெரும்பான்மையான பொதுமக்களின் பல் மற்றும் வாய் சார்ந்த நோய்களுக்கு அறியாமையே முழுமுதற்காரணம் என்பதை நான் கல்லூரியில் படித்து வரும் பொழுதே எனக்கு நன்றாக புரிந்தது. அந்த அறியாமையை போக்க பல முகாம்களை நான் நடத்தி பொதுமக்களின் அறியாமையை போக்க பற்பல முயற்சிகள் எடுத்தாலும் அது அனைவரையும் சென்றடைவது கடினமே இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த நூல். இந்த நூலை முழுமையாக படிப்பதன் மூலம் பொதுமக்கள் அறியாமையிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் பல் மற்றும் வாய் சார்ந்த நோய்களிடமிருந்தும் முழுமையாக விடுபட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்றும் உங்கள் பல் மருத்துவர் நிவ்யா அருணன்