நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலை நிலப் பயணம் நிலக் காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக் காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப் பதிவுகள். கூடவே விரிவான செய்திகள் உளக் கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்க நேர்ந்த பயணக் குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர் வாசிப்பும் எழுத்துப் பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள் அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக் குறிப்புகளில் ஒன்று.- ஜெயமோகன்.