<p>நாம் இரட்சிக்கப்பட்டவுடன் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கிறோம் இரட்சிப்பு என்பது துவக்கமே முக்கியமான பயணம் அதன் பின்னரே தொடங்குகிறது. நான் இரட்சிக்கப்பட்ட பிற்பாடு கிறிஸ்துவுக்குள்ளும் கிறிஸ்துவோடும் நடக்க வேண்டும். இந்த பயணம் எளிதல்ல. ஒரு நாளைக்கு பலமுறை நம் சுயம் சாக வேண்டியது இருக்கும் ஒவ்வொரு நாளும் நம்மில் நாம் சிறுகவும் கிறிஸ்து பெருகவும் வேண்டும். ஆவியானவர் நம்மோடு இருப்பின் இப்பயணம் கடினமானதும் அல்ல.</p><p>கடுகு அளவு விசுவாசம் மலையை பெயர்க்குமாப்போல வேதாகமத்திலே சிறிய புத்தகமான இந்த பிலேமோன் நிருபத்தின் ஆழமான கருத்துக்கள் நம்மில் கொண்டு வரக்கூடிய மாற்றம் பல! </p>