சில உயிர்களுக்கு பல பெண்கள் திருகிவிடும் பொம்மையாகவும் போதை தரக்கூடிய பொருளாகவுமே இருக்கிறார்கள். பெண் என்பவள் இயந்திரம் அல்ல என்பதை உணர வாசித்தலோ அல்லது எழுதுதலோ மட்டும் உதவாது. வாழ்வில் நம்முடன் வாழும் பெண்களை அவர்கள் விருப்பத்தில் நாம் வாழவைப்பதிலே அதை உணரமுடியும். இதை பற்றி முழுவதும் எடுத்துரைப்பதல்ல இனி வரும் கதைகள். இவையாவும் சில உயிர்களின் வாழ்வியலை எளிய முறையில் எடுத்துரைப்பதற்காகவே எழுதியது. இந்த சிறுகதைகளை வாசித்து உணர்வதும் உதாசீனப் படுத்துவதும் வாசிப்பவர்களின் மனநிலையை பொறுத்ததே.