<p>இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று - காலடிப் பட்ட இடமெல்லாம்! களம் பலப்பல! கடுவேகமாகப் போரிட்ட வண்ணம் நாடு பல வென்றான்; நானிலம் நடுங்கிடப் போரிட்டான். எங்கும் இரத்தவெள்ளம்; பிணமலை; எலும்புக் குவியல்!! போர்! போர்! போர்! என்று முழக்கம் எழுப்பியபடி இருபது ஆண்டுகள் எங்கும் எவரும் இவன் நடாத்தும் செயல்கள் பற்றியே பேசித் தீரவேண்டிய நிலைமை ஏற்படுத்திவிட்டான்; இரத்தம் பொங்கிற்று - மலை முகடுகளில் பெரு நகரங்களில் சாலைகளில் சோலைகளில் கடலோரங்களில்.</p><p></p><p>கிளம்பிவிட்டது இவன் நடாத்திச் செல்லும் பெரும் படை என்று செய்தி வெளிவந்தவுடன் அரண்மனைகளிலே அச்சம்! மாளிகைகளிலே மருட்சி! இல்லங்களிலே திகைப்பு ஏற்பட்டு</p><p>விடும்.</p><p></p><p>எப்பக்கம் பார்த்துப் பாய்ந்திடுமோ எவர்மீது தாக்குதல் நடத்திடுமோ என்ன நிபந்தனை விதித்திடுமோ என்ற ஏக்கம் குடிகொண்ட நிலையில் பேரரசர்கள் பீதி கொள்வர்.</p><p></p><p>'நேற்றுதானே கிளம்பிற்று! இதற்குள்ளாகவா காடு மலை கடந்து ஆறுகளைத் தாண்டி அழகு நகர் மீது தாக்குதலை நடத்துகிறது அந்தப் படை' என்று வியந்து கேட்பர் - அவ்வளவு வேகமாக எத்தகைய இடுக்கண்களையும் கண்டு கலங்காமல் எதர்ப்புகளை முறியடித்தபடி அவனுடைய படைகள் பாய்ந்திடும்.</p><p></p><p>பெருங்காற்றைத் தடுத்து நிறுத்திவிடத் தருக்களால் முடிவதுண்டோ - வேரறுந்தன்றோ பெரு மரங்கள் சாய்கின்றன பெருங்காற்றின் முன்பு! </p><p></p><p>இப்படையும் அதுபோன்றே எதிர்ப்புகளை முறித்துக் கீழே சாய்த்துவிட்டு இடியோசை போன்ற வெற்றி முழக்கமிட்டபடி முன்னேறும் வேகவேகமாக குறித்த இடம் நோக்கி விட்ட கணைபோலதாக்கும் சக்தி மட்டுமல்ல </p><p></p>