முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாசிரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழ்கிறார் அவர். எளிய கேள்விகளையும் விரித்து ஆழமாக விவாதிக்கிறார். வரலாறு என்றால் என்ன? அது எப்படி எழுதப்படவேண்டும்? நம் அடையாளம் என்ன? நம்மில் யார் ஆரியர்? யார் இந்தியர்? எது இந்திய மரபு? எது இந்தியப் பண்பாடு? இந்தியா இந்துக்களின் நிலமா? இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றா? வேதம் இதிகாசம் தொன்மம் ஆகியவற்றிலிருந்து வரலாற்றுத் தரவுகளை எவ்வாறு சேகரிப்பது? மதச்சார்பின்மை நமக்குத் தேவையா? ஆம் எனில் அது எப்படி இருக்கவேண்டும்? ரொமிலா தாப்பரின் வாழ்க்கை வரலாறு இரண்டையும் எளிய முறையில் அறிமுகப்படுத்துகிறார் மருதன். இன்றைய அரசியல் சூழல் ஏன் அச்சமூட்டக்கூடியதாக மாறி இருக்கிறது என்பதையும் அதிலிருந்து மீள நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் தாப்பரின் எழுத்துகள் வாயிலாக இந்நூல் ஆராய்கிறது