தொ.பரமசிவன் அண்மைக் காலத்தில் மிகவும். கவனிக்கப்பட்ட சமூக ஆய்வாளர். மிக எளிமையானபடி தன் ஆய்வு வழியாக தான் அறிந்தவற்றைச் சமூகத்தின் முன்னால் வைத்தவர். திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பார்வையைக் கொண்டிருந்தாலும் சாதாரண மக்களின் பண்பாடு அவர்கள் வழிபடும் சாமிகள் உணவு திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் அனுசரித்த சடங்கு முறைகள் என்று பல்வேறு அம்சங்களைச் சார்ந்ததாக இருந்தது அவருடைய பார்வை.பேச்சின் எளிமையை எழுத்தில் கொண்டுவந்த அவருடைய பார்வையைப் புலப்படுத்தும் இந்த சிறு நூல் அவருடைய நினைவுகளுக்கான எளிய அஞ்சலி.