SIGARANGALUKKU APPAL

About The Book

குமரன் ராசப்பன் நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல் சிச்சுவானின் பனிமலைகளுக்கும் பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம் வரை இருபதுக்கும் மேற்பட்ட சிகரங்களை நோக்கிய வாழ்நாள் பயணத்தைத் தொடங்கச் செய்தது. டாக்டர் குமரன் ராசப்பன் பாதுகாப்பாக இருந்த ஒரு சிங்கப்பூர் மாணவனாக இருந்து பிறகு ஒரு சாகசக்காரராக மருத்துவராக மக்கள் நலப் பணியாளராக உருவான அசாதாரணமான பயணத்தின் கதையை விவரித்துச் சொல்கிறார். அந்தப் பாதையில் அவர் மரணங்களைப் பார்க்கிறார் பனிப்புயல்களைச் சந்திக்கிறார் நிலநடுக்கங்களில் தப்பிப் பிழைக்கிறார் இவற்றின் வழியே மனிதர்களின் மன உறுதி வெற்றி தோல்வி ஆகியவற்றின் இயல்பு வெவ்வேறு கலாச்சாரங்களின் அழகு ஆகியவற்றைப் பற்றி வியப்பூட்டும் விவரங்களைக் கண்டடைகிறார். அவருடைய பயணம் அவருக்குக் கற்றுக்கொடுத்த மிகப் பெரிய பாடம் என்னவெனில் ஒருவரின் வெற்றி தோல்வியை மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது என்பதே. நாம் ஒவ்வொருவரும் ஏறுவதற்கு நமக்கென்று மலைகள் உண்டு. *** “மலையேற்றச் சாதனைகள் பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பு ஆனால் அதற்கும் மேலாக இளைஞர்கள் தங்கள் மனத்தையும் எண்ணங்களையும் ஒரு விஷயத்தில் தீவிரமாகச் செலுத்தினால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் ஒரு உண்மை நிகழ்வு இது.” - இந்திராணி ராஜா அமைச்சர் பிரதம மந்திரியின் அமைச்சகம் நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் சிண்டா அமைப்பின் தலைவர் சிங்கப்பூர்
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE