<p>கலைஞர் கருணாநிதியின் உள்ளம் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் ஓர் சிந்தனை ஆழி; ஆம் தொலைவில் தூங்கும் அழியாத லட்சிய முகடுகளை நோக்கி சுழன்று சீறும் எதிர்ப்புச் சூறாவளிக்கு அஞ்சாது வானம் முட்டப் பரந்து கிடக்கும் வர லாற்றுப் பரப்பிலே சொக்கி வாழ்வின் கரையோ ரத்திலே உற்சாக கீத மிசைக்கும் ஒய்யாரக் கடல் தான். </p><p></p><p>அந்த அழகுக் கடலில் குவிந்த முத்துக்களை தமிழகத்தின் கலைக் கூடத்திலே திரட்டித்தரும் பணி எமக்குக் கிடைத்தது குறித்து பெருமகிழ்வு கொள்கிறோம். </p><p></p><p>சாதாரணப் பிரஜை! அந்தப் பிரஜையின் ரத்த வியர்வை தான் பிரபுக்களின் மாளிகை பிரபுக்களின் </p><p>மகிழ்ச்சிபிரபுக்களின் வாழ்வு </p><p></p><p>காட்டில் திரியும் மிருகங்களுக்குக்கூட சந்தோஷ முண்டே! ஜோடிப் புறாக்கள்-ஓடி விளையாடும் மான்கள் பாடிப்பறக்கும் குயில்கள்-அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்! </p><p></p><p>சுதந்திர பூமி தான். ஆனால் இங்கே தான் பிணமலைகள்! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான்தோன்றித் தர்பார்கள். </p><p></p><p>வறுமை திருட்டு வஞ்சகம் விபசாரம்! எங்கே? வற்றாத ஜீவநதிகள் வளைந்தோடும் நாட்டிலே-வளமான சோலை </p><p>கள் பூத்துக்குலுங்கும் பூமியிலே. </p><p></p><p>வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்.'தாழ்ந்த உள்ளங்கள். </p><p></p><p>அப்பொழுதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிப்ப தில்லை அரசாங்கம். 'அநீதியிடையே வாழவேண்டாம் இறப் புலகில் இன்பம் காண்போம்'என்று சாவதற்குச்சென்றால் சட்டம் என்ற கையை நீட்டி சொந்தம் என்ற சூழ்ச்சி மொழி பேசுகிறது அரசாங்கம். அதிசயமான அரசாங்கம்! அற்புதமான நீதி! </p><p></p>