சிவகாமியின் சபதம் தெரியும். யார் இந்த சிவசாமி? அப்படி என்ன சபதத்தை எடுத்து விட்டார் இந்த பிரகஸ்பதி? இதோ சிவசாமியைச் சந்திக்கத் தயார் ஆகுங்கள். குதிரைகள் இல்லை. ஆனால் குதிரையைப் போல திமிறித் திமிறிச் சிரிக்கலாம். வாள் சண்டை இல்லை. வால்த்தனங்கள் உண்டு.உளிச் சத்தம் இல்லை. ஆனால் சிரிப்புச் சத்தத்துக்குக் குறைவில்லை.இவர் சிவகாமிக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா கூட இல்லை என்பதால் ஆத்தா சத்தியமாக இது சரித்திர நாவலும் இல்லை. ஆனால் சரித்திரம் படைக்கப் போகும் நாவல்என்பதில் சந்தேகமில்லை. காமெடி உலகின் தாதாவாகப் போட்டியின்றிஆட்சி நடத்தும் ஜே.எஸ். ராகவனின் முதல் நகைச்சுவை நாவல் இது.