‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல் சமூகக் கட்டுரைகளின் நூல் வடிவம்.சிறந்த ஒளிப்பதிவாளர் திரை இயக்குநர் மற்றும் இலக்கியவாதியான தங்கர் பச்சான் ஒரு பன்முகக் கலைஞர். அவரைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது படங்களை ரசிக்காதவர்கள்கூட இருக்கலாம். ஆனாலும் இப்புத்தகத்தில் எழுப்பியுள்ள கருத்துகளை எவராலும் புறக்கணிக்க முடியாது.- கே.சந்துரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிஇந்நூலைப் படிக்கின்ற அறிவுள்ள தமிழர்கள் சிந்திப்பார்கள். உணர்ச்சியுள்ள தமிழர்கள் செயல்படுவார்கள். இவையொன்றுமே இல்லாமல் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கும் உண்மை உணர்வின் உச்சத்தைக் கண்டு குறைந்தபட்சம் வியந்து நிற்பார்கள். இன்றைய தேவை தமிழர்களுக்கு வியப்பு அல்ல. விழிப்புதான். இந்த நூல் அந்த விழிப்புக்கு வித்திடும்.- உ. சகாயம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி