இவ்வுலகில் சொல்வதற்கும் கேட்பதற்கும் பலவகை கதைகள் இருக்கின்றன தினந்தோறும் பலவகை கதைகள் உருவாகின்றன. எனினும் தெரியப்படாத பல கதைகள் பல உயிர்களின் கதைகள் பல உயிர்களின் வாழ்க்கைகள் என சொல்லப்படாத கதைகளை தெரியப்படுத்தவும். பின் இந்த உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவர்களைப் போலவும் அவர்களை விடவும் பல அழகான உயிர்கள் இருக்கின்றது என நினைவுப்படுத்த போன்ற பல காரணங்களுக்காக இந்த கதை எழுதப்பட்டது. உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் தேவையான முதன்மை உணவை மையமாக வைத்துக் கொண்டு நடத்தப்படும் அரசியல் உலக வணிகம் உணவு சந்தை போட்டி போர் ஏற்றத்தாழ்வு வறட்சி புலம்பெயர்த்துதல் புறக்கணிப்பு தீண்டாமை போன்ற கொடிய வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சில ஜீவன்களின் கதை தான் இது.