இந்தியாவின் முதல் சாட்டிலைட் சேனலை உருவாக்கி அதை மிகப் பெரிய வணிகக் குழுமமாக வளர்த்த முன்னோடித் தொழிலதிபர் ஜீ டிவி (Zee TV) சுபாஷ் சந்திராவின் வெற்றிக்கதை இது. நம்முடைய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிறைவுசெய்தால் எப்பேர்ப்பட்ட வெற்றி வரும் என்பதைக் கண்முன்னால் நடத்திக்காண்பித்தவர் சுபாஷ் சந்திரா. அவர் துணிவோடு அமைத்த பாதையில்தான் இன்றைக்கு அத்தனை பொழுதுபோக்கு நிறுவனங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அவருடைய கனவுகளும் போராட்டமும் உழைப்பும் விடாமுயற்சியும் நமக்குப் பெரிய பாடங்கள்!