சின்ன வயதிலேயே என்னைத் தமிழ் ஆட் கொண்டுவிட்டது. தமிழ் என்றால் என் உயிர் என்று நினைக்கும்படியான ஓர் உள்ளுணர்வை என்னிடத்தே தூண்டிவிட்டவை கவியரசர் பாரதிதாசனின் பாடல்கள் தாம். பாரதிதாசன் பாடல்களை முன்மாதிரியாக வைத்து என் பாடல்களை எழுதத் துவங்கினேன். அப்போது என் ஆசிரியராய் இருந்த பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் இத்துறையில் என்னை ஊக்கப்படுத்தினர். ஆசிரியர் திரு. சுப. இராமநாதன் அவர்களும் என் தமிழார்வத்தை வளரச் செய்தார். தமிழ் உல கில் என்னைப் பெரும் புகழ் பெறச் செய்தவர் 'பொன்னி' ஆசிரியர் திரு முருகு. சுப்பிர மணியன் ஆவார்.இவர்களெல்லாம் என் கவிதைகளை வளர்க்கவும் பரப்பவும் துணை செய்தார்கள். ஆனல் அரசாங்கமோ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதி வெளியிட்ட இன்பத் திராவிடம் என்ற இனிய தமிழ்க் கவிதை நூலைத் தடை செய்துவிட்டது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.