<p>சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும் சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு - வஞ்சகர்களோ எப்படியோ எதைச் செய்தோ வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை தமிழக வரலாற்றுச் சுவடியிலே காணலாம் - தெளிவாகவும் விளக்கமாகவும் இராது - ஓரிரு வரிகள் - சிறுசிறு சம்பவங்கள் முறையிலே!!</p><p></p><p>முடிதரித்த மன்னர்கள் அரசு இழந்தால் அல்லற்படுவர்!</p><p></p><p>புதிய முலாம் பூசப்பட்டவர்கள் மன்னர்களாகி புது வாழ்வு துவக்குவர்.</p><p></p><p>அரசர்கள் வாழ்வு தாழ்வு எனும் இரு நிலைகளிலும் உருட்டப்படுவர். கால வேகத்தால். ஆனால் புரோகிதரோ புன்னகையை இழந்ததில்லை! மன்னன் மாறுவான்; மணிமுடி சிரம் மாறும்; மறையவர் குலத்துதித்து அரசவையில் இடம் பிடித்த 'ஜடாமுடி'யில் நிலைமாறாது.</p><p></p><p>'இவர்களல்லவா பாக்கியசாலிகள் என்பர் பாரும் - இவர்களின் முழு உருவம் இது மட்டுமல்ல.</p><p></p><p>நாட்டு நிலை மாறினாலும் தங்கள் நிலையிலே தாழ்வு புகாதபடி பார்த்துக் கொள்ளும் திறமைசாலிகளாக மட்டுமல்ல புரோகிதர் இருந்தது - நாட்டுநிலை இப்படி இப்படி மாறிவிடக் கூடும் என்று முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கேற்பத் தங்களைத் தயாராக்கிக் கொள்ளும் யூகசாலிகள்!!</p><p></p><p>அதுமட்டுமா! நாட்டின் நிலையை இவ்வண்ணம் மாற்றி அமைத்தால் தமது நிலையிலே இவ்வண்ணம் ஏற்றம் கிடைக்கும் என்று யூகித்து யாரும் அறியா முறையில் எவரும் குறை கூறாத தன்மையில் நாட்டு நிலையை மாற்றி அமைப்பர்.</p><p></p><p>இதன்படி மணிமுடிகள் உருண்டிடவும் மண்டலங்கள் கை மாறிடவும் மன்னர்கள் ஓடிடவும் மாமிசப் பிண்டங்கள் மன்னர்களாகிடவுமான</p><p></p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.