‘தப்பித்தால் தப்பில்லை’ ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன் மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால் செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?+ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும் ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்...! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம். அடி உதை ரத்தம் தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகிறான் அந்த நிருபன். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபனின் அவஸ்தைகள் வலிகள் வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் ‘24 ரூபாய் தீவு’ ஒரு ஜெட் வேகக் கதை.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.